குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் துர்காதேவி (34). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமாருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, மதுப் பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார், குடித்து விட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இதனால் கணவர் மீது துர்காதேவி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார், துர்காதேவியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த துர்காதேவி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார், துர்காதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, துர்காதேவியின் தாயார் கற்பகம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.