குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை

திருச்சி

மணப்பாறை அருகே திருமணமாகி ஒன்றை ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூர் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (20). இவர் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கஸ்தூரிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் உடன் திருமணம் நடைபெற்றது.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கஸ்தூரி கடந்த சில மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை

இதுகுறித்து கஸ்தூரியின் உறவினர்கள் அளித்த தகவலை தொடர்ந்து, மணப்பாறை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், கஸ்தூரி மரணம் குறித்து ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.