குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை… ஆர்.டி.ஓ. விசாரணை…

 

குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை… ஆர்.டி.ஓ. விசாரணை…

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள வடகால் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிரபாகரன் (25). இருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சூர்யா (25) என்வருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு வழக்கம்போல் பிரபாகரன் மீண்டும் சூர்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை… ஆர்.டி.ஓ. விசாரணை…

இதனால் மனமுடைந்த சூர்யா இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஶ்ரீபெரம்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ஒடகம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து, கணவர் பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருமணமாகி ஒரு ஆண்டே நடைபெறுவதால் தற்கொலை சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.