“பலான வெப் சைட்ல உங்களை பார்த்தேன் ,எப்ப மீட் பண்ணலாம்” -பெண் என்ஜினீயருக்கு வந்த போனுக்கான காரணத்த கேட்டா கதறுவீங்க …
ஒரு பெண் எஞ்சினியரின் கல்லூரி தோழன் அவரை விபச்சாரியாக ஊடகத்தில் சித்தரித்ததால் அவர் கைது செய்யப்பட்டார் .
மகாராஷ்டிராவின் புனேவில் வசிக்கும் ஒரு 27 வயதான பெண் மென் பொறியாளர் அங்குள்ள ஒரு ஐ டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் .அவர் இதற்கு முன்பு அங்குள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது ஒரு வாலிபர் அவரோடு படித்து வந்தார் .இருவரும் ஒரே கல்லூரியில் படித்த பின்பு வேறு வேறு கம்பெனியில் வேலை கிடைத்ததும் இருவரும் அவரவர் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார்கள் .ஆனால் அந்த வாலிபர் மட்டும் அந்த பெண் பொறியாளரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் .அதனால் அவர் பலமுறை அந்த பெண்ணிடம் தன்னுடைய காதலை கூறியும், அவரின் காதலை அவர் ஏற்கவில்லை .இதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணை பழி வாங்க துடித்தார் .
அதன் காரணமாக அந்த பெண்ணின் போட்டோவையும் போன் நமபரையும் ஒரு பலான வெப் சைட்டில் வெளியிட்டார் .அதில் அந்த பெண்ணை ஒரு விபச்சாரியாக சித்தரித்தார் .அதன் காரணமாக அந்த பெண்ணுக்கு சில நாட்களாக முகம் தெரியாத நபர்களிடமிருந்து இரவு நேரங்களில் விபச்சாரத்துக்கு அழைத்து போன் வர தொடங்கியது .இதனால் மனமுடைந்த அந்த பெண் சைபர் க்ரைம் போலீசில் புகார் கூறினார் .அவர்கள் அவரின் ஊடக விவரத்தினை ஆராய்ந்து பார்த்ததில் அவரின் கல்லூரி நண்பரே அந்த பெண்ணின் பெயரில் போலியாக சமூக ஊடக கணக்கினை உருவாக்கி, இந்த பலான வேலைகள் செய்ததை கண்டறிந்தார்கள் .அதன் பின்னர் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .