ஒரு வருட வேலிடிட்டி மற்றும் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா…ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்

 

ஒரு வருட வேலிடிட்டி மற்றும் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா…ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்

ஏர்டெல் நிறுவனம் ஓராண்டு வேலிடிட்டி கொண்ட புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: ஏர்டெல் நிறுவனம் ஓராண்டு வேலிடிட்டி கொண்ட புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் ஆகிய சலுகைகளை ஓராண்டு வேலிடிட்டியுடன் அளிக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் மற்றும் எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணம் ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பிரீபெய்டு திட்டம் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏர்டெல் டி.வி. செயலியின் பிரீமியம் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்த புதிய பிரீபெய்டு திட்டமானது ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோவின் வருடாந்திர சலுகையில் நாளொன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வருடாந்திர சலுகை குறித்து அந்நிறுவனத்தின் இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.