சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் தப்பியோட்டம்… வீட்டில் சம்மன் ஒட்டிய சிபிசிஐடி!

 

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் தப்பியோட்டம்… வீட்டில் சம்மன் ஒட்டிய சிபிசிஐடி!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா. முன்னாள் மாணவிகள் 18 பேர் பாலியல் புகார் கொடுத்த நிலையில் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது .

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் தப்பியோட்டம்… வீட்டில் சம்மன் ஒட்டிய சிபிசிஐடி!

வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகள் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்ட நிலையில் அவர்களுக்கு சம்மன் அனுப்ப பணிகளைத் தீவிரப்படுத்தியது. அவர்களுக்கு சிபிசிஐடி போலீஸார் தபாலில் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்கள் சம்மனை பெற்றுக் கொள்ளாமல், வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் தப்பியோட்டம்… வீட்டில் சம்மன் ஒட்டிய சிபிசிஐடி!

விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதற்காக அவர்கள் சம்மன் பெறாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியை காயத்ரி, பிரவீனா ஆகியோரது வீட்டில் சம்மனை சிபிசிஐடி போலீஸார் ஒட்டியுள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி அவர்களது வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.