நாளை முதல் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

 

நாளை முதல் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு தளர்வுகளை அளித்துள்ளது. அதன் படி அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. தற்போது திறக்கப்படாமல் இருப்பது பள்ளி மற்றும் கல்லூரிகள் தான். இதனிடையே வரும் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை முதல் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளத்தால் அதற்கான பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.