சிவசங்கர் பாபா பள்ளியிலிருந்து விலகும் ஆசிரியர்கள், மாணவர்கள்!

 

சிவசங்கர் பாபா பள்ளியிலிருந்து விலகும் ஆசிரியர்கள், மாணவர்கள்!

சென்னையை அடுத்து கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வரும் நிலையில் மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்து கொடுத்ததாக புகார் எழுந்துள்ளன. இதுகுறித்து 3 மாணவிகள் புகார் அளித்த நிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

சிவசங்கர் பாபா பள்ளியிலிருந்து விலகும் ஆசிரியர்கள், மாணவர்கள்!

இதுகுறித்து விசாரணை செய்ய, சம்மன் அளித்த நிலையில், சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி ஏற்பட்டு டேராடூனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசங்கர் பாபா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்ததுடன், டேராடூனில் உள்ள அவரிடம் விசாரிக்க சிபிசிஐடி குழு அங்கு விரைந்துள்ளது.

சிவசங்கர் பாபா பள்ளியிலிருந்து விலகும் ஆசிரியர்கள், மாணவர்கள்!

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து சுஷில்ஹரி பள்ளியிலிருந்து விலகும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் வாங்கி கொண்டு வேறு பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். மாணவர்கள் 50ற்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் மாற்று சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் ஆசிரியர்கள் பலர் விலகல் கடிதம் அளித்துள்ளனர்.