12 ஆம் வகுப்பு மாணவியுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் ஆசிரியருக்கு வலைவீச்சு

 

12 ஆம் வகுப்பு மாணவியுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் ஆசிரியருக்கு வலைவீச்சு

திண்டுக்கல் மாவட்டம் ஆரணி அருகே 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ஆசிரியரும், அரசு ஊழியருமானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

12 ஆம் வகுப்பு மாணவியுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் ஆசிரியருக்கு வலைவீச்சு

ஆரணி அருகே லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆரணியில் உள்ள ஓரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த போது எட்டாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2016 குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜா திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தட்டச்சராக 4 ஆண்டுளாக பணியாற்றி வருகிறார். அந்த மாணவி தற்போது 12-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராஜா மீது ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பாலியல் தீண்டல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.