“பாடம் நடத்துறேன்னு பாப்பாவை பாடா படுத்தறியே” -க்ளாஸ் ரூமுக்குள் வாத்தியாரை வைத்து பூட்டிய பொதுமக்கள்

 

“பாடம் நடத்துறேன்னு பாப்பாவை பாடா படுத்தறியே” -க்ளாஸ் ரூமுக்குள் வாத்தியாரை வைத்து பூட்டிய பொதுமக்கள்

ஒரு வகுப்பறைக்குளேயே வைத்து ஒரு ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஒரு ஆசிரியரை பொது மக்கள் போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது

உத்தரபிரதேசத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்குள் ஷிக்ஷா மித்ரா என்ற ஆசிரியர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார் .ஆனால் அவர் சிறுமிகளிடம் தவறாக நடப்பதாக அடிக்கடி புகார் வந்துள்ளது .
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவரிடம் இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியை அவர் வகுப்பறைக்குள் வைத்து பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இந்த விஷயத்தை அவரின் வீட்டிற்கு வந்து தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார் .இதனால கடும் கோபமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் ஊர் மக்களை திரட்டி கொண்டு , அந்த பள்ளிக்குள் சென்றார்கள் .பிறகு அந்த ஆசிரியர் பாடம் நடத்தும் வகுப்பறைக்கு சென்று அந்த ஆசிரியர் தப்பித்து ஓடி விடாத படி உள்ளே வைத்து பூட்டிவிட்ட்டார்கள் .
பிறகு அங்கிருந்த இருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த ஆசிரியர் செய்த பலாத்கார வேலையை பற்றி கூறி போலிஸ் அதிகாரிகளை அழைத்து வந்தனர் .அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த வகுப்பறைக்குள் சென்று அந்த ஆசிரியரை மீட்டு ,பொது மக்கள் அவரை அடிக்காமல் காப்பாற்றி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர் .ஆனால் பொது மக்கள் காவல் நிலையத்துக்கும் கூட்டமாக சென்று அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரினார்கள் .அப்போது அங்கு பொதுமக்களை பார்த்து போலீசார், அந்த ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் நடவடிக்கையெடுக்கப்படுமென்று உறுதியளித்ததும் பொது மக்கள் கலைந்து சென்றார்கள்.

“பாடம் நடத்துறேன்னு பாப்பாவை பாடா படுத்தறியே” -க்ளாஸ் ரூமுக்குள் வாத்தியாரை வைத்து பூட்டிய பொதுமக்கள்