விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா!

 

விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா!

ஆளும் கட்சியினரின் சட்டவிரோத முறைகேடுகள் மற்றும் ஆட்சியை கண்டித்து திருப்பதி மற்றும் சித்தூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினரின் போராட்டத்துக்கு அதிகாரிகள் தடை விதித்திருந்தனர்.

விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா!

இதனால் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜயவாடாவில் இருந்து விமானத்தில் திருப்பதிக்கு வந்த சந்திரபாபு நாயுடுவை விமான நிலையத்தில் இருந்து வெளியேற அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் அவரை அதே விமானத்தில் விஜயவாடா திருப்பி அனுப்பி வைக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தர்ணா போராட்டத்தை கைவிடும் படி காவல்துறை அதிகாரிகள் கையெடுத்து கும்பிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.