‘கிணற்றில் மிதந்த சடலம்’.. டாஸ்மாக் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

 

‘கிணற்றில் மிதந்த சடலம்’.. டாஸ்மாக் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கண்மாய்கரை சாலையில் இருக்கும் செம்மணிப்பட்டி டாஸ்மாக் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மதுக்கடைக்கு அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான தென்னதோப்பு இருப்பதால், அவர் அந்த கடையிலேயே காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல மதுக்கடைக்கு வந்த காவலாளி கணேசன், கட்டில் போட்டு உறங்கியிருக்கிறார்.

‘கிணற்றில் மிதந்த சடலம்’.. டாஸ்மாக் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

இரவு பணியை முடித்து விட்டு வழக்கமாக வீடு திரும்பும் கணேசன், காலை வரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் மதுக்கடைக்கு சென்று பார்த்ததில் கணேசனை அங்கு காணவில்லையாம். ஆனால் அவரது செருப்பு மட்டும் அங்கேயே கிடந்துள்ளது. இது குறித்து கணேசனின் மகள் வாடிப்பட்டி போலீசாருக்கு அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மதுக்கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர். இருப்பினும் கணேசனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

‘கிணற்றில் மிதந்த சடலம்’.. டாஸ்மாக் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளிக்கு நேர்ந்த கொடூரம்!

அவரை கொள்ளையர்கள் கடத்தி சென்றார்களா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததை அறிந்த அக்கிராம மக்கள், அவரை கண்டுபிடித்து தறுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், கணேசனின் உடல் அங்கிருந்த கிணற்றில் மிதந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த போது, அதனை தடுக்க முயன்ற கணேசனை கொள்ளையர்கள் கொன்று கிணற்றில் வீசியது அம்பலமானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.