கொரோனா பரவல் அதிகரித்ததால் டாஸ்மாக் நேரம் குறைப்பு!

 

கொரோனா பரவல் அதிகரித்ததால் டாஸ்மாக் நேரம் குறைப்பு!

கொரோனா பாதிப்பு காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 29 டாஸ்மாக் கடைகளை ஒரு மணிநேரம் முன்னதாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் செயல்பட்டுவரும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் முற்றிலும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்ததால் டாஸ்மாக் நேரம் குறைப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள 10 டாஸ்மாக் கடைகள் மற்றும் அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் உள்ள மொத்தம் 29 டாஸ்மாக் கடைகளை இரவு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கமாக காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் இரவு 8 மணிக்கு மூடுவது வழக்கம். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 143 டாஸ்மாக் கடைகளில் 29 கடைகளை ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது இரவு 7 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் வேப்பங்குடி, திருப்புனவாசல் ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வந்த மதுபானக்கடைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வருவதால் அந்த இரு கடைகளும் முற்றிலும் மூடப்பட்டது.