டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு…!

 

டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு…!

கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடெங்கும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக கடந்த மே 23 ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று உச்சத்திலுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு…!

இந்நிலையில் நாளை முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் நகராட்சி, பொன்னேரி, சோழவரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 150 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட இருக்கின்றன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் வரும் 19ஆம் தேதி லிருந்து 30 ஆம் தேதி வரை மூடப்படும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.