டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

 

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்தை தாண்டியுள்ளது.உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவையில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முக்கியமான 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

அதன்படி கோவை மாநகரில் கிராஸ்கட் சாலை ,100 அடி வீதி, துடியலூர் சந்திப்பு, புரூக்பீல்டு மால் ஆகிய 4 பகுதிகளில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளை மூட கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்திரவு பிறப்பித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நான்கு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகமான கூட்டம் வரும் என்பதால் இந்த கடைகளை மூடவும் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..