சாலை விபத்தில் டாஸ்மாக் பார் ஊழியர் உயிரிழப்பு

 

சாலை விபத்தில் டாஸ்மாக் பார் ஊழியர் உயிரிழப்பு

திண்டுக்கல்

வேடச்சந்தூர் அருகே நேற்றிரவு நடைபெற்ற சாலை விபத்தில் டாஸ்மாக் பார் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகேயுள்ள நாகையகோட்டை செண்டுவழி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(37). இவர் கோவிலூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு பணி முடித்து மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

சாலை விபத்தில் டாஸ்மாக் பார் ஊழியர் உயிரிழப்பு

புதுரோடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மணிகண்டன் இருசக்கர வாகனத்துடன் தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த எரியோடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.