மதுக்கடைகளை அகற்றகோரி அனைத்துக்கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

 

மதுக்கடைகளை அகற்றகோரி அனைத்துக்கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

தஞ்சை

திருவிடைமருதூர் அருகே குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் 2 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, அனைத்துக்கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேயுள்ள ஸ்ரீரங்கராஜபுரம் மற்றும் இருமுளை ஆகிய கிராமங்களில் அரசின் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மதுக்கடைகளை அகற்றகோரி அனைத்துக்கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள கடைகளால் பொதுமக்களும், பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த அனைத்துக்கட்சி நிர்வாகிகள் சார்பில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

மதுக்கடைகளை அகற்றகோரி அனைத்துக்கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசியல் கட்சியினர், இந்த மதுக்கடைகளை வரும் தீபாவளிக்குள் மூடாவிட்டால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.