தஞ்சையில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

 

தஞ்சையில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் 15 பேருக்கு, இன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 14 பள்ளிகள், 4 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று ஏற்பட்டது.

நோய் பரவலை தடுக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் முகாம் அமைத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று வெளியான முடிவுகளின் படி, புதிதாக 2 பள்ளிகளில் படிக்கும் 14 மாணவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சையில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

இதனை அடுத்து, அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நோய் தொற்றில் இருந்து மீண்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில், இன்று வெளியான பரிசோதனை முடிவில் பூதலூர் தனியார் கால்நடை கல்லூரியில் படிக்கும் மேலும், 15 மாணவர்களுக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.இதனால் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதித்த பளளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 280-ஐ கடந்துள்ளது.