’6000 ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது’ தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

 

’6000 ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது’ தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

ரயில்வே துறையில் பலவித மாற்றங்களைக் கொண்டு வருகிறது மத்திய அரசு. குறிப்பாக, தனியார்மயமாக்குவதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி மத்திய அரசின் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், ’கிராமப்புறங்களில், சின்னச் சின்ன ஊர்களில். அந்தப் பகுதிகளில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் எல்லாம் இனி ரயில்கள் நிற்காது என்று அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு. இதன் உள்ளர்த்தம் அந்த ஸ்டேஷன்களையெல்லாம் மூடிவிடுவதே.

’6000 ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது’ தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

இந்த முடிவுக்குக் காரணம், அங்கு பயணிகள் வருகை குறைவாம், அதனால் வருவாயும் குறைவாம். எப்படி இருக்கிறது பாருங்கள்.

ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றால், குறைந்தபட்சம் 50 பேர் ஏற-இறங்க வேண்டுமாம். இதை அளவுகோலாக வைத்து புதிய கால அட்டவணை அதாவது ‘பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை’ தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ். அதன்படியே குறைவான பயணிகள் ஏறும்-இறங்கும் வருவாய் குறைவான 6,000 ஸ்டேஷன்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றைக் குறைக்கத் திட்டமிடப்பட்டதாம்.

’6000 ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது’ தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

உலகத் தரம் வாய்ந்த பயணத்தை வழங்கவே ரயில்வேயின் மேற்கண்ட திட்டங்களாம். இத்திட்டத்திற்கான நவீன ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுமாம். முதல்கட்டமாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் இயக்கப்படுமாம். இத்திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாம். ஒவ்வொரு ரயிலிலும் 16 முதல் 24 பெட்டிகள் வரையில் இருக்குமாம். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில் பறக்குமாம்.

நாடு முழுவதும் தனியார் ரயில்களை இயக்க மும்பை, டெல்லி, சண்டிகார், சென்னை, செகத்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. நமது சென்னை தொகுப்பில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படும். அவை சென்னை – மதுரை, சென்னை – மங்களூர், சென்னை – கோயம்புத்தூர், திருச்சி – சென்னை, கன்னியாகுமரி – சென்னை, சென்னை – புதுடெல்லி, சென்னை – புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்கள்.

’6000 ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது’ தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

மக்களுக்குச் சொந்தமான இவ்வளவு பெரிய பொதுத்துறை நிறுவனத்தைத்தான் தனியாருக்குத் தாரைவார்க்கிறார் மோடி.

குறைவான பயணிகளே வருவதால் வருமானம் குறைவாக உள்ள 6,000 ஸ்டேஷன்களில் இனி ரயில்கள் நிற்காது!

இந்த முடிவும் சரி, ரயில்வே தனியார்மயமும் சரி, தேசத்திற்கும் அதன் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரானதே! இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், ரயிவேயில் மக்களுக்கு எதிரானவற்றை உடனடியாகத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி’ என்று குறிப்பிட்டுள்ளது.