அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை…வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை…வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ,திருநெல்வேலி ,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . தஞ்சாவூர், திருவாரூர் ,புதுக்கோட்டை ,மதுரை ,திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் , ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை…வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை முதல் வருகின்ற 29ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அத்துடன் உள்ள மாவட்டங்கள் திருநெல்வேலி ,தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை…வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடலோர மாவட்டங்களில் காற்றின் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90% விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.