தரை காற்றுடன் சூறைக்காற்று ; இந்த மாவட்டங்களில் கனமழை!

 

தரை காற்றுடன் சூறைக்காற்று ; இந்த மாவட்டங்களில் கனமழை!

வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தரை காற்றுடன் சூறைக்காற்று ; இந்த மாவட்டங்களில் கனமழை!

26 ஆம் தேதி வட தமிழகத்தில் தரைக்காற்று பலமாகவும் , இடையிடையே சூறை காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருகின்ற 27 மற்றும் 28ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரை காற்றுடன் சூறைக்காற்று ; இந்த மாவட்டங்களில் கனமழை!

தமிழக கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தரை காற்றுடன் சூறைக்காற்று ; இந்த மாவட்டங்களில் கனமழை!

மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக பெற்றுள்ளது. யாஸ் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தீவிர புயலாக தொடர்ந்து 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா – மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் 26-ஆம் தேதி பாரதீப் -சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.