வரும் 30 ஆம் தேதி வரை மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

 

வரும் 30 ஆம் தேதி வரை மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

தென் தமிழக கடலோரப் பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை,திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 30 ஆம் தேதி வரை மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

அதேபோல் வருகின்ற 28ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சேலம் ,தர்மபுரி ,ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90% விழுக்காடு வரை உள்ளதால் காட்சி இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் 30 ஆம் தேதி வரை மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.