மேலும் தளர்வுகளா? கூடுதல் கட்டுப்பாடுகளா? முதல்வர் ஆலோசனை!

 

மேலும் தளர்வுகளா? கூடுதல் கட்டுப்பாடுகளா? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா மே மாதம் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் தொடர்ந்து 2 வாரங்கள் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தினார். இதை தொடர்ந்து கொரோனா குறைய தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

மேலும் தளர்வுகளா? கூடுதல் கட்டுப்பாடுகளா? முதல்வர் ஆலோசனை!

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பள்ளிகள், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிகிறார்.