வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் பலியான விவகாரம்? – மனித உரிமை ஆணையம் அதிரடி நோட்டீஸ்!

 

வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் பலியான விவகாரம்? – மனித உரிமை ஆணையம் அதிரடி நோட்டீஸ்!

வேலூர் அடுக்கம்பாறையில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேரும், பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு மூன்று பேரும் மொத்தம் ஏழு பேரும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி உயிரிழந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் போனதே இவர்களின் இறப்புக்கு காரணம் என்று உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் பலியான விவகாரம்? – மனித உரிமை ஆணையம் அதிரடி நோட்டீஸ்!

ஆக்சிஜன் விநியோகம் தடைப்பட்டதால் 7 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர் என்றும், மருத்துவர்கள் ஆம்புலன்சில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் சென்று சிகிச்சைக்கு கொடுத்தனர் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். இந்தப் புகாரின் பேரில் மருத்து கல்வி இயக்குநரகம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை டீன் செல்விக்கு உத்தரவிட்டிருந்தது.

வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் பலியான விவகாரம்? – மனித உரிமை ஆணையம் அதிரடி நோட்டீஸ்!

இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. 7 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் செல்வி ஆகியோருக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.