இவ்வளவு தான் வசூலிக்கணும்… தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம்!

 

இவ்வளவு தான் வசூலிக்கணும்… தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம்!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்திருப்பதால் ஆம்புலன்ஸ் தேவைகள் அதிகரித்துள்ளது. அரசு சார்பில் இலவசமாக 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையிலும், தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்புலன்ஸ்கள், நோயாளிகளிடம் இருந்து அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இவ்வளவு தான் வசூலிக்கணும்… தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம்!

இந்த நிலையில், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த கட்டண விவரங்களை மருத்துவ மக்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதன் படி, சாதாரண ஆம்புலன்ஸ்கள் 10 கிலோ மீட்டருக்கு 1,500 ரூபாயும் அடிப்படை வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்க்கு 2,000 ரூபாயும் வென்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸுக்கு 4 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக சென்றால், சாதாரண ஆம்புலன்ஸ்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 25 வசூலிக்கலாம் என்றும் அதிநவீன வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் ரூபாய் 100 வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.