தமிழகத்தில் மேலும் 5,980 பேருக்கு கொரோனா உறுதி..ஒரே நாளில் 80 பேர் பலி: முழு விவரம் உள்ளே!

 

தமிழகத்தில் மேலும் 5,980 பேருக்கு கொரோனா உறுதி..ஒரே நாளில் 80 பேர் பலி: முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றும் அரசு தெரிவித்து வருகிறது. தற்போது தளர்வுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்து வருவதால் கொரோனா அச்சம் இல்லாமல் மக்கள் வெளியே சென்று வருகின்றனர். அதே போல, இ பாஸ் முறையிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் இன்றைய பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,980 பேருக்கு கொரோனா உறுதி..ஒரே நாளில் 80 பேர் பலி: முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் மேலும் 5,980 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு, 3,73,410 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,13,280 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதிலும் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5,603 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் சென்னையில் மேலும் 1,294 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் இதனால் சென்னையில் பாதிப்பு 1.24 லட்சம் ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஒரே நாளில் 73,447 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 41,36,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் இதுவரை 6,420 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிகிச்சை பெறுவோரை விட அதிகம் பேர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.