தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரும் 13ஆம் தேதி அன்று சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.

அதோடு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் வேளாண்மை துறை கென தனி நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தவாறு வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால் , அரசுப்பள்ளி மாணவர்கள் தொழில் கல்வி பயில்வதற்கு தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிந்து, உரிய தீர்வுகளை பரிந்துரைகளை செய்திடவும், ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவு நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.