அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றதைபோல், கொரோனாவிலிருந்தும் விடுதலை பெறுவோம்- தமிழிசை சவுந்தரராஜன்

 

அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றதைபோல், கொரோனாவிலிருந்தும் விடுதலை பெறுவோம்- தமிழிசை சவுந்தரராஜன்

74 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா போராட்டத்துக்கு நடுவே கொண்டாடப்படும் இந்த சுதந்திர தினவிழாவில் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றதைபோல், கொரோனாவிலிருந்தும் விடுதலை பெறுவோம்- தமிழிசை சவுந்தரராஜன்

இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில், “நம் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தன்று நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வீர சரித்திரங்களை நினைவு கூர்ந்து அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் ஒவ்வொரு சுதந்திர தின உரையிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாகவும் நிறைவேற்றி வருகிறார்கள். நம் பாரதப்பிரதமர் அவர்களின் முயற்சியால் நம் நாடு சுய சார்பு பாரதமாகவும் மாறியுள்ளது.

அந்நியர்களிடமிருந்து நம் நாடு விடுதலை பெற்றதை போன்று கரோனாவிலிருந்து விடுதலை பெறுவோம். அனைவருக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.