அவங்க எல்லாம் சமூக விரோதிகள்… தமிழிசை அதிரடி பேட்டி!

 

அவங்க எல்லாம் சமூக விரோதிகள்… தமிழிசை அதிரடி பேட்டி!

பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் பேரில் எல்லா மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் தடுப்பூசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

அவங்க எல்லாம் சமூக விரோதிகள்… தமிழிசை அதிரடி பேட்டி!

அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், இந்தியாவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பலர் வாய்க்கும் கழுத்துக்கும் தான் மாஸ்க் போடுகிறார்கள். குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே சரியாக மாஸ்க்கை அணிகிறார்கள். முதன் முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வைரஸ் பற்றிய எந்த தகவலும் நமக்கு தெரியாது. மக்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்று கூறினார்.

அவங்க எல்லாம் சமூக விரோதிகள்… தமிழிசை அதிரடி பேட்டி!

தொடர்ந்து பேசிய தமிழிசை, ஒரு வருடமாக நாம் கொரோனாவுடன் வாழ பழகி விட்டதால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்து இருக்கிறோம். அப்படி தெரிந்தும் முறையாக மாஸ்க் அணியாதவர்கள் சமூக விரோதிகள். உணவு சாப்பிடும் நேரத்தை தவிர பிற நேரங்களில் மாஸ்க் அணிய வேண்டும். இல்லையெனில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் பாதிப்பு உறுதியானால் பயப்பட வேண்டியதில்லை. சத்தான உணவை சாப்பிடுங்கள். கொரோனாவில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.