புதுச்சேரி சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு!

 

புதுச்சேரி சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு!

புதுச்சேரியில் என்.ஆர்.காங். கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், ரங்கசாமி முதல்வராக ஆதரவு தெரிவித்து துணை நிலை ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

புதுச்சேரி சட்டமன்ற கட்சி தலைவராக ரங்கசாமி தேர்வு!

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை என்னிடம் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்கசாமிக்கு வாழ்த்துகள்; பதவியேற்பு நிகழ்ச்சி கேட்கும் நேரத்தில் நடத்தப்படும்” என தெரிவித்தார்.