பயப்படும் அளவிற்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை- தமிழிசை

 

பயப்படும் அளவிற்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை- தமிழிசை

பொதுமக்கள் பயப்படும் அளவிற்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரத் துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே சூழலில் தடுப்பூசியும் விறுவிறுப்பாக போடப்பட்டுவருகிறது.

பயப்படும் அளவிற்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை- தமிழிசை

இந்நிலையில் ரெட்டியார் பாளையம் ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவிவரும் நிலையில் புதுச்சேரியில் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக செய்யப்பட்டுவருகின்றன. மக்கள் அச்சப்படும் அளவுக்கு கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. அனைவரும் மாஸ்க் அணிந்து தடுப்பூசி போட்டுக்கொண்டாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்தார்.