எனக்கு சுருட்ட முடி தான் ஆனா யார் பணத்தையும் நான் சுருட்டியது இல்ல- தமிழிசை சவுந்தராஜன்

 

எனக்கு சுருட்ட முடி தான் ஆனா யார் பணத்தையும் நான் சுருட்டியது இல்ல- தமிழிசை சவுந்தராஜன்

எனக்கு சுருட்ட முடி தான் ஆனால் யார் பணத்தையும் நான் சுருட்டியது இல்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “16 வயதினிலே ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் என விளையாட்டாக சொல்வேன். எனக்கு மீம்ஸ் போடுபவர்கள் என்னுடைய பரட்டை முடியுடன் தான் போடுவார்கள். சுருட்டை முடியுடன் பிறப்பது அவ்வளவு பெரிய தப்பா என்ன? நான் கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய உடைக்கே தனி ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் அரசியல்வாதி ஆனதும் உடையில் கவனம் செலுத்த முடியவில்லை.

கருப்பா இருப்பவர்கள் மீது விமர்சனங்கள் எழும்போது கருப்பாக யாருமே இல்லையா என அடிக்கடி கூறுவேன். கலரை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். குள்ளம் என சொல்வார்கள். உயரம் தோற்றத்தில் அல்ல, குணத்தில்தான் என கூறுவேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் என்றுமே நான் உயர்ந்திருக்க வேண்டும் என விரும்புவேன்.

எனக்கு சுருட்ட முடி தான் ஆனா யார் பணத்தையும் நான் சுருட்டியது இல்ல- தமிழிசை சவுந்தராஜன்

எனக்கு சுருட்ட முடி தான் ஆனால் யார் பணத்தையும் நான் சுருட்டியது இல்லை. என்னுடைய சொந்தபணத்தில் மக்களுக்கு நல்லது செய்துள்ளேன். நான் கருப்பு தான். ஆனால், என் கைகளில் கருப்பு பணம் இல்லை. அவமானங்கள், விமர்சனங்கள் வரும்போது தான் வெற்றியின் உயரத்துக்கு செல்லமுடியும், வெறி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.