பயத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டாம்; மகிழ்ச்சியோடு செல்லுங்கள்- தமிழிசை

 

பயத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டாம்; மகிழ்ச்சியோடு செல்லுங்கள்- தமிழிசை

பயத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டாம், மகிழ்ச்சியோடு செல்லுங்கள், எச்சரிக்கையோடு இருங்கள் என மாணவர்களுக்கு துணை நிலை ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பயத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டாம்; மகிழ்ச்சியோடு செல்லுங்கள்- தமிழிசை

புதுச்சேரியில் பள்ளிகள் இன்று முதல் திறக்க உள்ள சூழ்நிலையில் பள்ளி செல்லும், மாணவ, மாணவிகளுக்காக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கு செல்லும்போது பயத்துடன் செல்ல வேண்டாம். மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும். கொரோனா தாக்கிவிடுமோ என்ற அச்சம் வேண்டாம். ஆனால் எச்சரிக்கையொடு இருக்க வேண்டும். பள்ளிக்கு சென்றால் தோழிகளையோ, தோழர்களையோ பார்க்கும்போது நேராக சென்று கைகொடுப்பதும், கட்டி அணைப்பதும் போல் இல்லாமல், தூரத்தில் இருந்தபடியே நாம் அவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொள்ள வேண்டும்.

சரியான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், ஒருவேலை சளியோ, காய்ச்சலோ இருந்தால், உடனே ஆசிரியர்களிடமும், பெற்றோரிடமும் தெரிவித்து பள்ளிக்கு செல்வதில் இருந்து விலகி இருக்கலாம். எச்சரிக்கையாக இருந்தால் நாம் எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்கலாம், பள்ளிக்கு போகலாம் என்று தெரிவித்துள்ளார்.