மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்- தமிழிசை

 

மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்- தமிழிசை

புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 32 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 17 ஆயிரத்து 666 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரே நாளில் ஆயிரத்து 491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,151 ஆக உள்ளது.

மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்- தமிழிசை



இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி தொலைபேசியில் தொலைபேசியில் தொடர்புகொண்டு புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவின் தற்போதைய சூழ்நிலை குறித்தும் அதனை கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே அளித்த உதவிகளுக்கும் மேலாக மேலும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துதரும் என உறுதி அளித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.