கவலைக்கிடமாக உள்ள அன்பழகனுக்கு தமிழிசை அனுப்பிய சிறப்பு மருந்து!

 

கவலைக்கிடமாக உள்ள அன்பழகனுக்கு தமிழிசை அனுப்பிய சிறப்பு மருந்து!

கொரோனா தோற்றால் சிகிச்சை பெற்று வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனுக்கு தெலுங்கானாவில் இருந்து ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்ட ரெம்டேசிவர் (Remdesiver)மருந்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமானம் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் இந்த மருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் சென்னை குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரத்தில் அவரது உடல்நிலை சீராகிவந்த நிலையில் மீண்டும் அவருக்கு நேற்று உடல்நிலை மோசமானது. உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்புகொண்டு தெலுங்கானாவில் வேறு ஏதேனும் சிறப்பு மருந்துகள் இருக்கிறதா என்பதை கேட்டிருக்கிறார்கள்?

கவலைக்கிடமாக உள்ள அன்பழகனுக்கு தமிழிசை அனுப்பிய சிறப்பு மருந்து!

ஹைதராபாத்தில் தயாரிக்கப்படும் ரெம்டேசிவர் மருந்து கொரோனா பாதிப்பு நல்ல பலன்களைத் தரக்கூடிய காரணத்தினால் அந்த மருந்தை இன்று காலை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை. அன்பழகனுக்கு இந்த மருந்து இன்று மதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் பலன் கிடைத்ததா என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை