கண் தானம் செய்யும் முதல்வரின் முடிவுக்கு தமிழிசை பாராட்டு!

 

கண் தானம் செய்யும் முதல்வரின் முடிவுக்கு தமிழிசை பாராட்டு!

தனது கண்களை தானம் செய்ய உள்ளதாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆக.25 ஆம் தேதி முதல் செப்.8 ஆம் தேதி வரை தேசிய கண் தான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் கண்தான விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. இந்த நாளில் மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தான் கண் தானம் செய்ய உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும், கண் தானம் செய்வதற்கான படிவத்திலும் அவர் கையெழுத்திட்டார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கண் தானம் செய்யும் முதல்வரின் முடிவுக்கு தமிழிசை பாராட்டு!

இந்த நிலையில் முதல்வருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”கண் தானத்தை ஊக்குவிக்கும் வண்ணம் எனது கண்களை தானம் செய்ய உள்ளேன் ” என்று தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கண் தானம் செய்ய உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.” என குறிப்பிட்டுள்ளார்.