‘அந்த செய்தி என்னுடையது அல்ல’ தமிழருவி மணியன் விளக்கம்

 

‘அந்த செய்தி என்னுடையது அல்ல’ தமிழருவி மணியன் விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனைத் தாக்கி சமூக வலைதளங்களில் தன் பெயரில் உலா வரும் புகைப்படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். தொல். திருமாவளவனைத் தாக்கி ஒரு தரக்குறைவான விமர்சனத்துடன் தமிழருவி மணியனின் புகைப்படமும் அதில் பதிவிட்டிருந்தபடி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு விசிகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ள தமிழருவி மணியன், “தன்னுடைய புகைப்படத்துடன் சில செய்திகள், சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. இந்த செய்திகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. காந்திய மக்கள் இயக்கத்தின் கடித முகப்பில் தன்னுடைய கையெழுத்துடன் வரும் செய்தி அறிக்கைகள் மட்டுமே உண்மையானவை. மற்றபடி பரப்பப்படும் அவதூறு செய்திகள் பற்றி ஏற்கனவே தான் தெளிவுப்படுத்தியுள்ளேன். இதுபோன்று அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது காந்திய மக்கள் இயக்கம் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். நன்றி!” எனக் கூறியுள்ளார்.