“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

 

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக ஒருவழியாக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருப்பார்கள். குறிப்பாக கூட்டணியில் தலைமையில் இருக்கும் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதையே அவர்களும் விரும்புவார்கள்.

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

இதனை வெளிப்படுத்தும் விதமாகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரின் பேச்சு அமைந்துள்ளது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுகவுக்கு எங்களின் பேராதரவை வழங்குகிறோம். திமுக எத்தனை தொகுதிகளைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருக்கிறோம் இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” என்றார். வேல்முருகன் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

முன்னதாக, அதிமுக கூட்டணியில் அதிருப்தி காரணமாக வெளியேறிய கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படையும், தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியிருக்கின்றனர். அவர்களுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.