ஊர்களுக்கு தமிழ் பெயர்… ஆங்கிலத் தன்மையை விரட்டும் முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

 

ஊர்களுக்கு தமிழ் பெயர்… ஆங்கிலத் தன்மையை விரட்டும் முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

1018 ஊர்களின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழ் உச்சரிப்பு வரும்வகையில் மாற்றியிருப்பதை டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். மேலும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஊர்களுக்கு தமிழ் பெயர்… ஆங்கிலத் தன்மையை விரட்டும் முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், “தமிழ்நாட்டில் 1018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு இணையான ஆங்கில உச்சரிப்புக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகளாகியும் இன்னும் விலகாத ஆங்கிலத் தன்மையை விரட்டும் இந்த முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

http://


மற்றொரு ட்வீடில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் தொடர்ந்து 30-ஆவது ஆண்டாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இனியாவது அவர்கள் தங்களின் வாழ்நாளை குடும்பத்தினருடன் கழிக்க வேண்டும். அவர்களை விரைந்து விடுதலை செய்ய வேண்டும்!” என்று கூறியுள்ளார்.