“டேய் கொரானா ,நான் உன்ன கொல்லாம விடமாட்டேண்டா” -கொரானா வார்டில் குடித்து விட்டு கலாட்டா செய்த கொரானா நோயாளி.

 

“டேய் கொரானா ,நான் உன்ன கொல்லாம விடமாட்டேண்டா” -கொரானா வார்டில் குடித்து விட்டு கலாட்டா செய்த கொரானா நோயாளி.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முத்துக்குமரன் என்ற 48 வயது நபருக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஆகஸ்ட் 12ம் தேதி அங்குள்ள ராஜா முத்தய்யா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அப்போது அவரின் மனைவி அன்று மதியம் சாப்பாடு பை ஒன்றை அவரின் கணவருக்கு அந்த ஹாஸ்ப்பிட்டலில் கொண்டு வந்து கொடுத்தார் .அந்த பைக்குள் அவர் மதுபாட்டில்களை தன்னுடைய கணவருக்கு குடிக்க கொண்டு வந்து கொடுத்துள்ளார் .

“டேய் கொரானா ,நான் உன்ன கொல்லாம விடமாட்டேண்டா” -கொரானா வார்டில் குடித்து விட்டு கலாட்டா செய்த கொரானா நோயாளி.
அந்த மது பாட்டில்களை வாங்கிய அவரின் கணவர், யாருக்கும் தெரியாமல் அந்த வார்டுக்குள் குடித்தார் .பிறகு மது குடித்த சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது .போதையேறிய அவர் உடனே சத்தம் போட்டு கத்தி அங்கிருந்த மற்ற நோயாளிகளிடம் கலாட்டா செய்ய ஆரம்பித்தார் .இதனால் பயந்து போன மற்ற நோயாளிகள் அவர் மீது புகார் கொடுத்தனர் .புகாரை பெற்ற போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், அவரின் மனைவி கலைமங்கை என்பவர் தன்னுடைய கணவர் கேட்டதால் இப்படி மது பாட்டிலை வாங்கி வந்து கொடுத்ததாக கூறினார் .பிறகு போலீசார் அவரின் மனைவி மீது தொற்று நோய் சட்டப்படி வழக்கு பதிவு செய்தனர் .

“டேய் கொரானா ,நான் உன்ன கொல்லாம விடமாட்டேண்டா” -கொரானா வார்டில் குடித்து விட்டு கலாட்டா செய்த கொரானா நோயாளி.