தமிழக சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

 

தமிழக சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் உள்ள சிறைத்துறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

சென்னை புழல் சிறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சிறைத்துறை கண்காணிப்பாளர்களை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் மதுரை சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா காலியாக இருந்த திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சென்னை புழல் ,மதுரை ,சேலம், கடலூரில் உள்ள மத்திய சிறைகளில் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

சேலம் சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் மதுரை சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் புழல் சிறை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காத்திருப்பு பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார் கடலூர் சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.