“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!”-பொன்மலையில் மூன்றாம் நாள் மறியல் போராட்டம்!

 

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!”-பொன்மலையில் மூன்றாம் நாள் மறியல் போராட்டம்!

“தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” என்ற முழக்கத்தோடு, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் ஒரு வாரம் தொடர் மறியல் போராட்டத்தின், மூன்றாம் நாள் போராட்டம் இன்று (14.09.2020 – திங்கள்) காலை நடைபெற்றது.

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!”-பொன்மலையில் மூன்றாம் நாள் மறியல் போராட்டம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் தொடர்ந்து வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரை இந்திய அரசு பணியமர்த்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, கொரோனா முழுமுடக்கக் காலத்திலும் தமிழ்நாட்டு இரயில்வேயில் 3,218 பேரை வேலையில் சேர்த்துள்ளது. இவர்களில் 90 விழுக்காட்டினர்க்கு மேல் இந்திக்காரர்களும், பிற அயல் மாநிலத்தவர்களும் ஆவர். திருச்சி பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையில் அண்மையில் பணியில் சேர்க்கப்பட்ட 541 பேரில், 400 பேர்க்கும் மேல் இந்திக்காரர்கள்! இதே இரயில்வேத் துறையில் இரண்டாண்டு பழகுநர் பயிற்சி முடித்த பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களைப் புறக்கணிக்கிறது இரயில்வே!

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!”-பொன்மலையில் மூன்றாம் நாள் மறியல் போராட்டம்!

இந்நிலையில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும், கொரோனா காலத்தில் தென்னகத் தொடர்வண்டித்துறையில் பணி நியமனம் செய்த 3,218 பேரில் வெளி மாநிலத்தவர்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள அனைவரின் தேர்வையும் இரத்துச் செய்ய வேண்டும், அப்பணி இடங்களைத் தேர்வெழுதிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் மண்ணின் மக்களுக்கான வேலைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம் அமைத்து உடலுழைப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு கடந்த 11.09.2020 அன்று தொடங்கி 18.09.2020 வரை ஒரு வாரம் தொடர் மறியல் நடத்தப்படுகின்றது.

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!”-பொன்மலையில் மூன்றாம் நாள் மறியல் போராட்டம்!

அதன்படி, இன்று (14.09.2020) திங்கட்கிழமை காலை, திருச்சி பொன்மலை தொடர்வண்டித் துறைத் தொழிற்சாலை முன்பு – மூன்றாம் நாள் மறியல் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. முருகன் தலைமையில் நடைபெற்றது.

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!”-பொன்மலையில் மூன்றாம் நாள் மறியல் போராட்டம்!