ம.பி-யை பின்பற்றி தமிழக அரசும் சட்டம் இயற்ற வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

 

ம.பி-யை பின்பற்றி தமிழக அரசும் சட்டம் இயற்ற வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

மத்தியப் பிரதேச இளைஞர்களுக்கு மட்டுமே மாநில அரசு வேலை என்று அம்மாநில முதல்வர் அறிவித்ததைப் பின்பற்றி தமிழகமும் சட்டம் இயற்ற வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ம.பி-யை பின்பற்றி தமிழக அரசும் சட்டம் இயற்ற வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்
மத்திய பிரதேசத்தில் மாநில அரசு வேலைகள் இனி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மாநிலத்தின் வளங்கள் மாநில மக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே மக்கள் என்று கூறிக்கொள்ளும்

ம.பி-யை பின்பற்றி தமிழக அரசும் சட்டம் இயற்ற வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ஜ.க-வைச் சேர்ந்தவரே இப்படி செய்யலாமா என்று சிலர் கேள்வி எழுப்ப, பலரும் சிவ்ராஜ் சிங் சௌகானுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

http://


பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில மக்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!” என்று கூறியுள்ளார்.