கொரோனாவைத் தடுக்க தமிழக அரசு தன் கடமையை செய்கிறது! – ராமதாஸ் பாராட்டு

 

கொரோனாவைத் தடுக்க தமிழக அரசு தன் கடமையை செய்கிறது! – ராமதாஸ் பாராட்டு

கொரோனா தடுப்புப் பணியில் அரசு தன் கடமையை செய்து வருகிறது. மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

http://


பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு அதன் கடமையை செய்து வருகிறது. மக்களும் தங்கள் பங்குக்கு பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, அரசுக்கு அளித்து வரும் ஒத்துழைப்பை மேலும், மேலும் அதிகரிக்க வேண்டும்.

கொரோனாவைத் தடுக்க தமிழக அரசு தன் கடமையை செய்கிறது! – ராமதாஸ் பாராட்டு

அப்போது தான் தமிழகத்தில் கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்!
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நேற்று 44,560 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக சோதனைகள் செய்யப்படவில்லை. அரசுக்கு பாராட்டுகள். அரசின் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் விரைவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று நம்புவோம்!” என்று கூறியுள்ளார்.