இந்த மாவட்டங்களுக்கு ‘பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள்’

 

இந்த மாவட்டங்களுக்கு ‘பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள்’

இரவு நேர ஊரடங்கால் பகல் நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை விதித்துள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டங்களுக்கு ‘பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள்’

இந்நிலையில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பகல் நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரவு 10 மணிமுதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு போது பேருந்துகளை இயக்க அனுமதி இல்லாததால் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளைமுதல் நெல்லை ,தென்காசி ,தூத்துக்குடி ,நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.