இவர்களுக்கு ரூ.5000ஆயிரம் ஊக்கத்தொகை…ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

 

இவர்களுக்கு ரூ.5000ஆயிரம் ஊக்கத்தொகை…ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

காவலர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுக்கு ரூ.5000ஆயிரம் ஊக்கத்தொகை…ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காலக்கட்டத்திலும் உழைத்து வரும் முன் களப்பணியாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவிப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் , முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் என ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

இவர்களுக்கு ரூ.5000ஆயிரம் ஊக்கத்தொகை…ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பெருந்தொற்று உலக அளவில் மட்டுமல்ல இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது காவல்துறையினர் தங்களது இன்னுரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாக அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது