என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் மறைவு : தமிழக முதல்வர் இரங்கல்!
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவர் கடந்த 23ஆம் தேதி அவர் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் இருந்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் என்ஆர்காங். எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள அக்கட்சியின் பொதுசெயலாளர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் இறப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், புதுச்சேரி மக்களின் நலன்களுக்காக உழைத்து நன்மதிப்பை பெற்றவர் பாலன் என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.