“உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் ” -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..

 

“உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் ” -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..

ஒரு கொரோனா வைரஸ் நோயாளி தன்னைச் சுற்றியுள்ளவர்களால் ஒதுக்கி வைக்கப்படுவதும் ,நோயாளிகளின் உடல்கள் சாலையிலும், மருத்துவமனைகளிலும் அவர்களது உறவினர்களால் கைவிடப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் வேலூரில் கொரானாவிலிருந்து குணமான ஒரு மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமையும் அரங்கேறியுள்ளது .

“உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் ” -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..வேளூர் மாவட்டம் நரியம்பேட்டையில் பீவி என்ற 103 வயது பெண் தனது மகள் முபாரக் மற்றும் பேத்தி ஷாமா ஆகியோருடன் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். ஜூன் 29 அன்று, பீவிக்கு நரியம்பட்டையில் உள்ள ஒரு உள்ளூர் பொது சுகாதார மையத்தில் (பி.எச்.சி) கொரானா டெஸ்ட் எடுத்து,முடிவு பாசிட்டிவ் வந்ததால் சிகிச்சைக்கு அவர் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
பிறகு ஜூலை 12ம் தேதி கொரானா சிகிச்சை முடிந்து குணமான பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார் .

“உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் ” -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..அவர் குணமாகி வீட்டுக்கு வந்த நாள் முதல் ,அந்த வீட்டு உரிமையாளர் அவரை வீட்டை காலி செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளார் .பக்கத்து வீட்டு காரர்களோ அவரை ஊரை விட்டே போக சொல்கின்றனர் .
ஆனால் எங்களிடம் வீட்டை மாற்றி வேறு இடத்திற்கு போவதற்கு வசதியில்லை என்று அவர்கள் கூறியும் ஊர்க்காரர்கள் கொடுமை படுத்தியதால், மனம் நொந்த மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார் .

“உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் ” -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..

இந்த புகாரை கேட்ட திருப்பத்தூர் கலெக்டர் எம்.பி. சிவன் அருள், மூதாட்டியின் குடும்பத்திற்கு முறையான உதவிகளை வழங்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார் .