‘டெல்லியில் கனிமொழி, திருமா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள்’ : தடுத்து நிறுத்திய போலீஸ்!

 

‘டெல்லியில் கனிமொழி, திருமா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள்’ : தடுத்து நிறுத்திய போலீஸ்!

டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்கச் சென்ற தமிழக எம்.பி.க்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

‘டெல்லியில் கனிமொழி, திருமா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள்’ : தடுத்து நிறுத்திய போலீஸ்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து சரியான பாதையில் சென்று கொண்டிருந்த விவசாயிகளின் போராட்டம், குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறை சம்பவத்தால் திசை மாறிப்போனது. இதையடுத்து, பாரதிய கிசான் சங்கம் போராட்டத்தில் இருந்து பின்வாங்கியது. இருப்பினும், போராட்டத்தை கைவிட விரும்பாத விவசாயிகள் டெல்லியின் காசிப்பூர், திக்ரி, சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் குவிந்துள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு டெல்லி போலீஸ் தடுப்பு வேலிகள் அமைத்திருக்கிறது.

‘டெல்லியில் கனிமொழி, திருமா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள்’ : தடுத்து நிறுத்திய போலீஸ்!

அண்டை நாடுகளிடம் இருந்து இந்தியாவை காக்க வேலிகள் அமைக்கப்படுவதை போல, தற்போது டெல்லியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காலிகமாக கான்கிரீட் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய கேப் கிடைத்தால் கூட டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடும் அளவிற்கு போராட்டம் வலுத்திருக்கிறது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி – உ.பி எல்லையான காசிப்பூருக்கு சென்ற தமிழக எம்.பிக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

‘டெல்லியில் கனிமொழி, திருமா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள்’ : தடுத்து நிறுத்திய போலீஸ்!

எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேருந்தில் காசிப்பூருக்கு சென்றனர். அங்கு தடுப்பு வேலிகள் போடப்பட்டுள்ளதால் எம்.பி.க்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் டெல்லி போலீசார் சாலையில் பதித்து வைத்திருந்த ஆணிகளை விவசாயிகள் அகற்றுவதாக தகவல்கள் வெளியாகின்றன.