‘அந்த’ இரண்டும் எங்கள் உயிரின் முழக்கம்… உரக்கச் சொல்லும் நாள் ஏப்ரல் 6 – கர்ஜித்த சு.வெங்கடேசன் எம்பி

 

‘அந்த’ இரண்டும் எங்கள் உயிரின் முழக்கம்… உரக்கச் சொல்லும் நாள் ஏப்ரல் 6 – கர்ஜித்த சு.வெங்கடேசன் எம்பி

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாரிவேந்தரின் ஐஜேகே தவிர்த்து மக்களவை தேர்தலில் கூட்டணியிலிருந்த அதே கட்சிகள் தான் இத்தேர்தலிலும் தொடர்கின்றன.

‘அந்த’ இரண்டும் எங்கள் உயிரின் முழக்கம்… உரக்கச் சொல்லும் நாள் ஏப்ரல் 6 – கர்ஜித்த சு.வெங்கடேசன் எம்பி

கூட்டணி தலைவர்கள் அனைவருமே அதிமுக-பாஜக கூட்டணியை மதவாத கூட்டணி என்றே விமர்சிக்கின்றனர். குறிப்பாக, ஜனநாயகத்திற்கு எதிராக அக்கூட்டணி இருப்பதால் மக்கள் அனைவரும் மதச்சார்பற்ற தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க பரப்புரையில் கூறுகின்றனர். அந்த வகையில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரும் மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த ட்வீட்டில், “இந்தி திணிப்பு எதிர்ப்பு – தமிழ் மொழி வளர்ச்சி, இரண்டும் எங்களின் உயிர் முழக்கம் என்பதை உலகுக்கு உரக்கச்சொல்லும் நாள் ஏப்ரல் 6” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் மக்கள் அனைவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கும் பாஜக கூட்டணிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முடிவுரை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.